Sunday, November 17, 2013

தலைப்பில்லை

சுப்பு எனக்கு அறிமுகமானது அவனுடைய 10 வது வயதில்தான். அப்போதான் அவனுடைய அப்பா இறந்திருந்தார். அவனது அப்பாவை சுற்றியிருந்த கூட்டத்தில் உள்ளவர்கள் அழுததால் இவனும் ஒருமுறை அழுதுவிட்டு என்னை கோலி விளையாட கூப்பிட்டான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எனக்கும் அவனுடைய வயது தான்... அம்மாவும், மூன்று தங்கைகளும் அவனுக்கு. அம்மா, அப்பா வழி சொத்துக்கள் எதுவும் கிடையாது. அவனது அப்பா அரசு ஊழியர். பென்ஷன் திட்டம் செயலில் வராத ஒரு துறை.

அந்த குடும்பத்தின் சுமை இனி இவனுக்கானது. எப்படி இவன் இதை சுமக்கப்போகிறான் என்ற உறுத்தல் எனக்கு அன்று ஏற்பட்டது.

அவன் அப்பா இருந்தவரையில் ஆவரேஜிக்கும் சற்று கூடுதலாக மதிப்பெண் வாங்குவான். அதன் பின்னர் விளையாட்டு பிள்ளையானான். எப்போதும் என்கூடவே சுற்றுவான். நான் ச்சுச்சா போக சாக்கடை ஓரம் போனால் அவனுக்கு வருதோ இல்லையோ... அவனும் ட்ரவுசரை தூக்கிக்கொண்டு வந்து சும்மா நின்றுவிட்டு என்கூடவே வருவான். இப்படி பொறுப்பற்று போனவனின் போக்கு எங்கே U டேர்ன் அடித்தது என்று தெரியவில்லை.

காரணம் என்னுடைய அப்பா திடீரென சென்னைக்கு பனி மாற்றம் செய்யப்பட்டிருந்தார். நாங்கள் எல்லோரும் சென்னைக்கு இடம் மாறியிருந்தோம்.

மறுபடியும் 12 வருடங்கள் கழித்து சுப்புவை வந்து பார்த்தல் ஆளே மாறியிருந்தான். அவனுடைய அப்பா வேலைக்கு அவன் தேர்வு செய்யப்பட்டிருந்தான். அவனது தங்கைகள் இருவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தான். மற்றொரு தங்கை படிப்பு முடிக்கு தருவாயில் இருந்தால்.

No comments:

Post a Comment